தென்னிந்திய சினிமாவை கலக்கிவரும் டாப் முன்னணி நடிகர்களின் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்த நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து ,
முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை நயன்தாரா . மேலும் நடிக்க வந்த புதிதில் பல நடிகர்களுடன கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார் . கிட்டத்தட்ட ஏழு வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில்,
கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . அப்படி திருமணமான சில மாதங்களிலேயே இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டார் நடிகை நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய கணவர் மற்றும் மகன்களுடன் ,
எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து “இது போதும் எனக்கு” என்று பதிவிட்டுள்ளார் நடிகை நயன்தாரா. இதோ அந்த புகைப்படங்களை நீங்கள் பாருங்க…