தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை திரிஷா. ஆனால் இடையில் இவருடைய படங்கள் ,
தொடர்ச்சியாக தோல்வி படங்களாக இருந்து வந்தது . இதனால் மார்க்கெட்டை இழந்த திரிஷாவுக்கு மீண்டும் மார்க்கெட்டை பெற்றுத் தந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் . இந்த படத்திற்குப் பிறகு அஜித்துடன் விடாமுயற்சி , கமலுடன் தக் லைப் , சிரஞ்சீவியுடன் ,
விஸ்வம்பாரா என்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை திரிஷா. இதனால் வருங்காலத்தில் இவருடைய மார்க்கெட் உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் 40 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் ,
செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை தெரு நாயுடன் கொண்டாடியிருக்கிறார் நடிகை திரிஷா . தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…
View this post on Instagram