கடந்த மாதம் 19 ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத் ,திரிஷா ,அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் ,சாண்டி மாஸ்டர் ,மடோனா செப்பாஸ்டின் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தை எஸ் எஸ் லலித்குமார் தயாரித்து இருந்தார் .
இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இப்படி இந்த திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை அள்ளியும் கூட லோகேஷுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளாராம் லியோ பட தயாரிப்பாளர்.
அந்த வகையில் லியோ படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்ததாம். பின்னர் படம் ஆரம்பிக்கும் போதே அட்வான்ஸ் மற்றும் குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இதன் பிறகு லோகேஷ்,
சொன்னதை விட லியோ படத்தின் பட்ஜெட் அதிகமானதால் இவர் மீது லலித் கோவத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது . இந்த காரணத்தினால் லோகேஷுக்கு ஐந்து கோடி சம்பளம் பாக்கி சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்கள் லலித்திடம் ,
கேள்வி எழுப்பிய போதும் இதைப் பற்றி லோகேஷ் கேட்டால் நான் பதில் சொல்வேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அவர்கள் …