April 25, 2024

புஸ்ஸி ஆனந்தை நம்பி அரசியல் பண்ணாதீங்க ..!! விஜய்யை எச்சரித்த பிரபலம் ..!! என்ன காரணம் தெரியுமா ..??

நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சி  தொடங்கினாரோ  அப்போதிலிருந்து வாழ்த்துகளை விட விமர்சனங்கள் தான் குவிந்து கொண்டே வருகிறது . குறிப்பாக நடிகர் விஜய்க்கு அரசியல் அனுபவம் கிடையாது என்றும் , அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளால் கூட எதுவும் செய்ய முடியவில்லை , இவரால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் புஸ்ஸி ஆனந்தை நம்பி ,

அரசியல் பண்ணாதீங்க என்று விஜய்க்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார் பிரபலம் ஒருவர்.  அவர் வேறு யாரும் இல்லை தயாரிப்பாளர் கே ராஜன் தான் . அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து வருபவர் புஸ்ஸி ஆனந்த் .

இவருடைய காதுக்கு போன பிறகுதான் , விஜய் காதுகே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் போகுமாம் . இன்னும் சொல்ல போனால் புஸ்ஸி ஆனந்தை தான் விஜய் கண்மூடித்தனமாக நம்புகிறாராம். ஆனால் புஸ்ஸி ஆனந்தால் தான் விஜய்யும் அவருடைய அப்பாவும்,

பேசாமல் இருந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது . அதோடு விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் பல பேருக்கு புஸ்ஸி ஆனந்தை சுத்தமாக பிடிக்காதாம் . இந்நிலையில் இதுகுறித்து பேசிய கே ராஜன் , விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன்.

ஆனால் புஸ்ஸி ஆனந்தை போன்றவர்களை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நீங்கள் அரசியலுக்கு வந்தால் நீங்கள் தான் இறங்கி வேலை செய்யணும் என்று விஜய்க்கு அறிவுரை கூறியிருந்தார் கே ராஜன்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *