நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சி தொடங்கினாரோ அப்போதிலிருந்து வாழ்த்துகளை விட விமர்சனங்கள் தான் குவிந்து கொண்டே வருகிறது . குறிப்பாக நடிகர் விஜய்க்கு அரசியல் அனுபவம் கிடையாது என்றும் , அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளால் கூட எதுவும் செய்ய முடியவில்லை , இவரால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் புஸ்ஸி ஆனந்தை நம்பி ,
அரசியல் பண்ணாதீங்க என்று விஜய்க்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார் பிரபலம் ஒருவர். அவர் வேறு யாரும் இல்லை தயாரிப்பாளர் கே ராஜன் தான் . அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து வருபவர் புஸ்ஸி ஆனந்த் .
இவருடைய காதுக்கு போன பிறகுதான் , விஜய் காதுகே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் போகுமாம் . இன்னும் சொல்ல போனால் புஸ்ஸி ஆனந்தை தான் விஜய் கண்மூடித்தனமாக நம்புகிறாராம். ஆனால் புஸ்ஸி ஆனந்தால் தான் விஜய்யும் அவருடைய அப்பாவும்,
பேசாமல் இருந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது . அதோடு விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் பல பேருக்கு புஸ்ஸி ஆனந்தை சுத்தமாக பிடிக்காதாம் . இந்நிலையில் இதுகுறித்து பேசிய கே ராஜன் , விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன்.
ஆனால் புஸ்ஸி ஆனந்தை போன்றவர்களை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நீங்கள் அரசியலுக்கு வந்தால் நீங்கள் தான் இறங்கி வேலை செய்யணும் என்று விஜய்க்கு அறிவுரை கூறியிருந்தார் கே ராஜன்…