பிரதீப் ரங்கநாதன் ஒரு வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார் . ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இப்படி வெளியான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் கடந்த வருடம் வெளியான லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார் . வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான,
இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது . அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள எல்ஐசி என்ற படத்தில் ,
நடிக்க இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன் . இந்த படத்தில் பிரதீப்புடன் இணைந்து எஸ் ஜே சூர்யா , கீர்த்தி ஷெட்டி போன்ற பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் . இதை முடித்த கையோடு ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் பிரதிப்.
இப்படி ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புக் ஆகியுள்ளதால் இனி மற்ற ஹீரோவை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம் பிரதீப் ரங்கநாதன் . குறிப்பாக அது சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் சரி , தளபதியின் படமாக இருந்தாலும் சரி ,
பிரதீப் ரங்கநாதனின் பதில் இதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு படம் ஹிட் கொடுத்ததற்கே இப்படியா என்று கூறி வருகின்றனர்…