தமிழ் சினிமா உலகில் கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பூ . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பார்வதி. இப்படி வெளியான முதல் படத்திலேயே கிராமத்து பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை பார்வதி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,
தமிழில் வெளியான சென்னையில் ஒரு நாள், மரியான் ,உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை பார்வதி . அது மட்டுமல்லாமல் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ,
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை பார்வதி. மேலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்க கூடியவர் நடிகை பார்வதி . இதனால் இவர் தேசிய விருது உட்பட ,
பல உயரிய விருதுகளை வென்றிருக்கிறார் . மேலும் இவர் மலையாளம் ,தமிழ் ,ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பூ படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த நடிகையா இது.? இப்போது வேற லெவலில் இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…