May 2, 2024

நல்லா இருந்த கேப்டனுக்கு திடீருன்னு என்ன ஆச்சு ..?? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சினிமாவை தாண்டி நிஜத்தில் நடிக்க தெரியாதவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் . அப்படி சினிமா மீது இருந்த ஆசையில் சென்னைக்கு வந்த விஜயகாந்த் பல வருட போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் நடிகராக அறிமுகமானார் . பின்னர்  குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் விஜயகாந்த்.இப்படி சினிமாவில்,

கலக்கிக் கொண்டு வந்த கேப்டன் அரசியலிலும் ஒரு கை பார்த்தார் என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருக்கு இப்படியா நடக்கணும் என்று சொல்வது போல உடல்நிலை விஜயகாந்தை வீட்டிலேயே முடக்கியது . இப்படி இருக்கும் நிலையில் கடந்த நவம்பர் 18 தேதி,

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கேப்டன் . பின்னர் விஜயகாந்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது விரைவில் வீட்டிற்கு சென்று விடுவார் என்று கூறப்பட்டது . இந்நிலையில் மருத்துவமனை திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

அந்த வகையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது .எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவருடைய உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் , அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.அவர் விரைவில் பூரண உடல்நலம்,

பெறுவார் என்று நம்புகிறோம் ,அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் .  இதைப் பார்த்த ரசிகர்கள் கேப்டன் பூரண நலம் பெற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *