சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா. அது என்னவென்றால் லால் சலாம் படத்தில் நடித்திருந்த நடிகை தன்யா பாலகிருஷ்ணனால் தான். அந்த வகையில் தன்யா பாலகிருஷ்ணன் தமிழில் வெளியான,
ஏழாம் அறிவு ,காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம் ,ராஜா ராணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியின் போது இவர் போட்ட ட்விட்,
பெரிய அளவில் சர்ச்சையை உண்டாக்கியது. அதில் தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள், எங்களுடைய பெங்களூரை ஆக்கிரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள் , எங்களிடம் பிச்சை கேட்டால் தருகிறோம் என்று மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார்,
நடிகை தன்யா பாலகிருஷ்ணன் . இதனால் இவருக்கு எதிராக தமிழ் ரசிகர்கள் கொந்தளித்தனர் . இதனால் இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று சபதம் எடுத்திருந்தார் நடிகை தன்யா . ஆனால் அப்படிப் பேசிய தன்யா பாலகிருஷ்ணன் இப்போது லால் சலாம் படத்தில்,
ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் . மேலும் தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று விமர்சித்த ஒரு நடிகையை எப்படி ஐஸ்வர்யா லால் சலாம் படத்தில் நடிக்க வைத்தார் , தமிழில் நடிகைகளே கிடையாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…