கேப்டன் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து எங்களை எல்லாம் பார்க்க வருவார் என்று அவருடைய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கையை எல்லாம் பொய்யாக்கி நிரந்தர தூக்கத்திற்கு சென்று விட்டார் ,
கேப்டன் விஜயகாந்த் அவர்கள். இந்நிலையில் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளார் விஜயகாந்த் . மேலும் கேப்டன் விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . தற்போது கேப்டன் விஜயகாந்தின் கடைசி நிமிட காட்சிகள் பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது…