May 5, 2024

நிரந்தர தூக்கத்துக்கே சென்ற விஜயகாந்த் ..!! அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்ட உடல் ..!! கடல் போல் குவிந்த மக்கள் ..!!

கேப்டன் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து எங்களை எல்லாம் பார்க்க வருவார் என்று அவருடைய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தனர்.  ஆனால் அந்த நம்பிக்கையை எல்லாம் பொய்யாக்கி நிரந்தர தூக்கத்திற்கு சென்று விட்டார் ,

கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.  இந்நிலையில் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளார் விஜயகாந்த் . மேலும் கேப்டன் விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . தற்போது கேப்டன் விஜயகாந்தின் கடைசி நிமிட காட்சிகள் பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *