April 22, 2024

பவதாரணியை இழந்து தவிக்கும் இளையராஜாவின் குடும்பம் ..!! முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படங்கள் ..!!

மறைந்த பின்னணி பாடகி பவதாரணி இசைஞானி இளையராஜாவின் மகள் ஆவார் . கடந்த 1995 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியான ராசையா என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார் பவதாரணி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உல்லாசம், ராமன் அப்துல்லா ,நேருக்கு நேர் ,காதலுக்கு மரியாதை, மனம் விரும்புதே உன்னை, பாரதி ,ப்ரெண்ட்ஸ் ,அழகி, புதிய கீதை,

பிதாமகன்,  தாமிரபரணி போன்ற பல திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடி இருக்கிறார் பவதாரணி . குறிப்பாக இவருடைய குரல் குயில் போல இனிமையாக இருக்கும் . அதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார் பவதாரணி.

இப்படி ஒரு நல்ல பாடகியாக கலக்கிக்கொண்டு வந்த பவதாரணி நல்ல இசையமைப்பாளர் என்றும் நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் அமிர்தம் ,இலக்கணம், வெள்ளச்சி, மாய நதி  போன்ற தமிழ் படங்களுக்கும் ஆங்கிலம், தெலுங்கு , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி,

படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இசைஞானியின் வாரிசாக பெயர் புகழை சம்பாதித்த பவதாரணிக்கு கேன்சர் ஏற்பட்டது . இதனால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரணி நேற்று திடீரென இறந்து விட்டார்.

இப்படி இருக்கும் நிலையில் பவதாரணி ,கார்த்திக் ராஜா ,யுவன் சங்கர் ராஜா, இளையராஜா ,அவருடைய மனைவி எல்லோரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *