May 7, 2024

கேப்டனுடன் நாங்கள் இருந்திருந்தால் ..!! கண்டிப்பாக அவரை முதலமைச்சராக்கி இருப்போம் ..!! இப்ப சொல்லி என்ன பிரோஜனம் ..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்களை தூக்கி விட்டு அழகு பார்த்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . அந்த வகையில் ஆரம்பத்தில் வில்லனாக கலக்கி கொண்டு வந்த மன்சூர் அலிகானையும்  விஜயகாந்த் தான் தூக்கிவிட்டார் . அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து கேப்டன் பிரபாகரன், செந்தூரப்பாண்டி ,வல்லரசு ,நெறஞ்ச மனசு ,தென்னவன் ,விருதகிரி போன்ற பல திரைப்படங்களில் ,

ஒன்றாக நடித்திருந்தனர் . மேலும் மன்சூர் அலிகான் தனக்கு என்ன தோன்றுகிறதோ , அதைத்தான் செய்வார், பேசுவார்  என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஒரு சில இடங்களில் அவர் செய்யும் ரகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது . அப்படி சமீபத்தில் கூட ,

திரிஷாவை மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார் . ஆனால் இவர் பயப்படும் ஒரே நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்துக்கு  மட்டும் தான் . அவர் சொன்னால் மறுபேச்சு கிடையாதாம் .  இதனாலேயே அவருடைய இறப்பை தாங்க முடியாமல் அவருடைய காலடியிலேயே,

சோறு தண்ணி இல்லாமல் கிடந்தார் மன்சூர் அலிகான்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் , கேப்டன் விஜயகாந்த் மட்டும் இன்று இருந்திருந்தால் அவர் இரண்டு முறை முதலமைச்சர் ஆகியிருப்பார்.  மேலும் ராவுத்தர் ,மன்சூர் அலிகான்,

லியாகத் அலிகான் போன்றவர்கள் எல்லாம் கேப்டனுடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை முதலமைச்சராகி அழகு பார்த்திருப்போம் என்று கூறியிருந்தார் மன்சூர் அலிகான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *