ரச்சிதா மகாலட்சுமி ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமான ரச்சிதா கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் . இதன் பிறகு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் தான் .
இந்த சீரியல் இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து நாச்சியார்புறம் ,நாம் இருவர் நமக்கு இருவர் 2 ,இது சொல்ல மறந்த கதை போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரச்சிதா . ஆனால் திருமணமாகி 8 வருடங்கள் கழித்து இருவரும் பிரிந்து விட்டனர். இப்படி இருக்கும் நிலையில் தினேஷை பிரிந்தவுடன் புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்,
ரச்சிதா . அந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் ரச்சிதா . அப்படி அந்த புகைப்படங்களை பதிவிட்டு கண்டதை வைரல் ஆக்குவதை விட இத ஆக்குங்களே என்று யாரையோ மறைமுகமாக தாக்குவது போல பதிவு போட்டு இருந்தார் ரச்சிதா…