திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் ஜெயிக்கலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரை பிடிக்காதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் வாய்ப்பு கேட்டு வந்த நடிகரை அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . அவர் வேறு யாரும் இல்லை,
நடிகர் பிளாக் பாண்டி தான் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பாண்டி அங்காடித் தெரு மூலம் பெரிய அளவில் பிரபலமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெய்வத்திருமகள் ,வேலாயுதம், நீர்ப்பறவை, ஜில்லா ,பூஜை போன்ற பல திரைப்படங்களில் நடித்து,
பிரபலமானார் நடிகர் பாண்டி . மேலும் ஆரம்பத்தில் இவர் விஜய் டிவியில் பணிபுரிந்த போது சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக பழகி இருக்கிறார் . இதனால் பட வாய்ப்புக்காக சிவகார்த்திகேயனிடம் பேச முயற்சி செய்து இருக்கிறார் பாண்டி . ஆனால் சிவகார்த்திகேயன்,
தன்னுடைய மேனேஜரை அழைத்து பிளாக் பாண்டியிடம் 20,000 பணத்தை கொடுக்க சொன்னாராம் . இதைப் பார்த்து ஷாக்கான பாண்டி என்னுடைய உடல் நன்றாக இல்லை என்றால் நான் வாங்கிக் கொள்வேன் . இப்போது நான் நன்றாக தான் இருக்கிறேன் வேண்டாம் ,
என்று கூறிவிட்டாராம் . இதன்பிறகு இப்போது வரை சிவகார்த்திகேயன் பாண்டியிடம் ஒரு வார்த்தை கூட எதுவும் கேட்கவில்லையாம் . இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிளாக் பாண்டியே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …