May 6, 2024

வாய்ப்பு கேட்ட நடிகரை இப்படியா அசிங்கப்படுத்துவது ..?? சிவகார்த்திகேயனின் மறுமுகம் இது தானா ..?? ஓப்பனாக சொல்லிய பாதிக்கப்பட்ட நடிகர் ..!!

திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் ஜெயிக்கலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரை பிடிக்காதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.  ஆனால் வாய்ப்பு கேட்டு வந்த நடிகரை அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . அவர் வேறு யாரும் இல்லை,

நடிகர் பிளாக் பாண்டி தான் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பாண்டி அங்காடித் தெரு மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெய்வத்திருமகள் ,வேலாயுதம், நீர்ப்பறவை, ஜில்லா ,பூஜை போன்ற பல திரைப்படங்களில் நடித்து,

பிரபலமானார் நடிகர் பாண்டி . மேலும் ஆரம்பத்தில் இவர் விஜய் டிவியில் பணிபுரிந்த போது சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக பழகி இருக்கிறார் . இதனால் பட வாய்ப்புக்காக சிவகார்த்திகேயனிடம் பேச முயற்சி செய்து இருக்கிறார் பாண்டி . ஆனால் சிவகார்த்திகேயன்,

தன்னுடைய மேனேஜரை அழைத்து பிளாக் பாண்டியிடம் 20,000 பணத்தை கொடுக்க சொன்னாராம் . இதைப் பார்த்து ஷாக்கான  பாண்டி என்னுடைய உடல் நன்றாக இல்லை என்றால் நான் வாங்கிக் கொள்வேன் . இப்போது நான் நன்றாக தான் இருக்கிறேன் வேண்டாம் ,

என்று கூறிவிட்டாராம் . இதன்பிறகு இப்போது வரை சிவகார்த்திகேயன் பாண்டியிடம் ஒரு வார்த்தை கூட எதுவும் கேட்கவில்லையாம் .  இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிளாக் பாண்டியே  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *