April 26, 2024

சென்னை மக்களுக்காக 5 கோடி கொடுத்த பிரபலம் ..!! சூர்யா , சிவகார்த்திகேயனை தொடர்ந்து உதவிய நல் உள்ளம் ..!! மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் ரசிகர்கள் ..!!

கடந்த வாரம் மிக்ஜாம் என்ற புயல் வந்ததால் சென்னையே  தற்போது வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது . குறிப்பாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் சென்னை மக்களால் வெளியே கூட வர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் அத்தியாவசிய தேவைக்காக பலரும் போராடி வந்தனர்.  இந்த நேரத்தில் பல பிரபலங்கள் களத்தில் இறங்கி வேலை செய்தனர்.  அது மட்டுமல்லாமல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,

பலரும் உதவி வருகின்றனர் . அந்த வகையில் சூர்யா,  சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் தலா 10 லட்சம் சென்னை மக்களுக்காக வழங்கியிருந்தனர் . இவர்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன்,

5 கோடிக்கான  காசோலையை முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் கலாநிதி மாறனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *