கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் அன்றாட தேவைக்கு கூட வழி இல்லாமல் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதையெல்லாம் பார்த்த பல தன்னார்வலர்கள் மற்றும் பிரபலங்கள் சென்னை மக்களுக்காக களம் இறங்கி பல உதவிகளை செய்து வருகின்றனர் . அப்படித்தான் விஜய் டிவியின் மூலம் பிரபலமான கே பி ஒய் பாலாவும் உதவி செய்திருந்தார் .
அந்த வகையில் அவரிடம் இருந்த இரண்டு லட்சத்தை ஆயிரம் ரூபாய் என்று பிரித்து கிட்டத்தட்ட 200 குடும்பங்களுக்கு கொடுத்திருந்தார் பாலா . மேலும் இந்த நேரத்தில் இவ்வளவுதான் பணம் இருந்ததாகவும் கூறியிருந்தார் . 100 கோடி , 150 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களே ,
பணம் கொடுக்க யோசித்த நிலையில் கே பி ஒய் பாலா தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து உதவியதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இரண்டு லட்சம் கொடுத்தும் மனசு கேட்காமல் இருந்த பாலா தன்னுடைய அவசர தேவைக்காக,
சீட்டு போட்டு வைத்திருந்த 3 லட்சம் ரூபாயை பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு ஒரு வீட்டுக்கு 5 கிலோ அரிசி என்ற விதம் ,600 கிலோ அரிசி வாங்கி கொடுத்திருக்கிறாராம் . அதோடு சாலையோரம் வசிக்கும் கிட்டத்தட்ட 150 குடும்பங்களுக்கு மேல் தலா 1000 ரூபாய் ,
என்று 1, 50,000 உதவித்தொகையுடன் அவர்களுக்கு தேவையான நைட்டி, கைலி உட்பட உடைகளையும் வழங்கி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் உண்மையான ஹீரோ நீதான்யா என்று பாலாவை புகழ்ந்து வருகின்றனர்…