April 30, 2024

ஒரு டாக்டர் ,ஒரு தொழிலதிபர் , ஒரு கோச் ..!! மூன்று மகள்களையும் கரைசேர்த்த கே எஸ் ரவிக்குமார் ..!! வெளிவந்த புகைப்படங்கள் இதோ ..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கியமான கமர்சியல் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் . ஆரம்பத்தில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கே எஸ் ரவிக்குமார் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கிய இருந்தாலும்,

இவருக்கு நாட்டாமை ,முத்து, அவ்வை சண்முகி ,நட்புக்காக ,படையப்பா ,பஞ்சதந்திரம் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது . குறிப்பாக இவருடைய எல்லா திரைப்படங்களுமே எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது .

இப்படி தவிர்க்க முடியாத  இயக்குனராக  கலக்கிக்கொண்டு வந்த கே எஸ் ரவிக்குமார் சமீப காலமாக இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். அந்த வகையில் லால் சலாம் , கங்குவா , அந்தகன் என்று மூன்று படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்,

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.   இதனிடையே கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்ட கேஸ் ரவிக்குமாருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.  இதில் ஒரு மகள் லைவ் கோச் ஆகவும், இன்னொரு மகள் டாக்டராகவும் ,இன்னொரு மகள் சொந்தமாக தொழில் செய்தும் வருகிறாராம்.

இந்நிலையில் மூன்று மகள்களையும் கரை சேர்த்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *