சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை கலக்கி வரும் உச்ச நட்சத்திரம் ஆவார் . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கும் ரஜினி தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார் ,மோகன்லால் ,சுனில், ஜாக்கி சரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன்,
யோகி பாபு , தமன்னா போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் . சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இமயமலைக்கு செல்ல உள்ளதாக ,
தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சமீபகாலமாக தன்னுடைய மூத்த மகளால் மிகப்பெரிய வேதனையை அனுபவித்து வந்த ரஜினிகாந்த் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை செல்ல உள்ளாராம் . மேலும் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி இமயமலைக்கு,
செல்ல உள்ள ரஜினிகாந்த் 7 நாட்கள் அங்கேயே தங்க உள்ளாராம் . குறிப்பாக பல வருடங்களாக உடல் நலக் குறைவாலும் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் இமயமலைக்கு செல்லாமல் இருந்து வந்த ரஜினி தற்போது தன்னுடைய மகளுக்காகவும்,
ஜெயிலர் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத்தான் மீண்டும் இமயமலை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை பார்த்த ரஜினி ரசிகர்கள் ஷாக்காகி சூப்பர் ஸ்டாருக்கு ஆறுதலை கூறிவருகின்றனர் …