தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான் . இதனால் தன்னுடைய தொலைக்காட்சியின் டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம் கலாநிதி மாறன் . அப்படித்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதுவும் இந்த நிகழ்ச்சியில் சிம்புவை நடுவராக ,
அழைக்கலாம் என்று இயக்குனர் நெல்சன் தான் அப்போது ஐடியா கொடுத்தாராம் . அந்த நேரத்தில் சிம்புவுக்கும், இன்னொரு நடிகருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது மட்டுமல்லாமல் அந்த எபிசோடு சூப்பர் ஹிட்டானது . இதனால் நெல்சனுக்கு தூது விட்டாராம் கலாநிதி மாறன் . ஆனால் நெல்சன் வரவில்லை யாம் .
இப்படி இருக்கும் நிலையில் பதினைந்து வருடம் கழித்து நெல்சனை சூப்பர் ஸ்டார் வைத்து பழிவாங்கி விட்டார் கலாநிதி மாறன் . அந்த வகையில் வளர்ந்து வரும் இயக்குனராக இருந்து வந்த நெல்சனுக்கு சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்து அவரை தன் வசம் வைத்துக் கொண்டாராம் கலாநிதி மாறன்…