April 30, 2024

ஒரே வாரத்தில் காதலை சொல்லி திருமணம் செய்துகொண்ட விஜய்சேதுபதி ..!! காதல் மனைவியின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் ..!!

தமிழ் சினிமா உலகில் மிகவும் பிசியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,

சூது கவ்வும் ,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,பண்ணையாரும் பத்மினியும் , ஜிகிர்தாண்டா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் விஜய் சேதுபதி . மேலும் ஆரம்பத்தில் ஹீரோவாக கலக்கிக்கொண்டு வந்த ,

விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் வில்லனாகவும்  ஸ்கோர் செய்து வந்தார் . இந்நிலையில் தற்போது மேரி கிறிஸ்மஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தன்னுடைய காதல் குறித்து கூறியிருந்தார் .  அந்த வகையில் விஜய் சேதுபதி,

துபாயில் இருக்கும்போது ஆன்லைன் மூலம் அவருடைய மனைவி ஜெஸ்ஸியுடன் பேசி இருக்கிறார் . அப்படி பேசிய ஒரே வாரத்திலேயே அவரிடம் காதலை சொல்லி  பின்னர் ஐந்து மாதம் கழித்து துபாயில் இருந்து வந்த உடனே திருமணம் செய்து கொண்டாராம் விஜய்சேதுபதி .

மேலும் என்னுடைய வாழ்வில் தைரியமாக எடுத்த முடிவு என்றால் அது இதுதான் என்றும் கூறியிருந்தார் விஜய் சேதுபதி.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் , அவருடைய மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *