தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று தவிர்க்க முடியாத கதாநாயகர்களின் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் அஜித் . மேலும் அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதை அடுத்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சிஎன்ற படத்தில்,
நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித் . மேலும் நடிகர் அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி நல்ல மனிதராக வாழ்ந்து வரும் நடிகர் அஜித் மீண்டும் தன்னை ஜென்டில்மேன் என்று நிரூபித்திருக்கிறார் . அந்த வகையில் கடந்த 2000 ம் ஆண்டு ,
நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் நடிகர் அஜித் . அப்படி திருமணமான பிறகும் அஜித் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது ஷாலினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம் . இதனால் தன்னுடைய மனைவியை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக தான்சமீப காலமாக,
எந்த ஒரு ரொமான்ஸ் படங்களையும் தேர்வு செய்யாமல் இருக்கிறாராம் நடிகர் அஜித். அது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராயாக இருந்தால் கூட முத்தக்காட்சிக்கு நோ என்று அதிரடியாக கூறுகிறாராம் அஜித் . அதோடு என்னை அறிந்தால் படத்தில் நடிக்கும் போது திரிஷாவுடன் நெருக்கமான காட்சிகளில் ,
நடிக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் . ஆனால் நடிகர் அஜித் என்னால் இப்படி எல்லாம் நடிக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டாராம். இதனால்தான் சமீப காலமாக அஜித்தின் படங்களில் கதாநாயகிகள் ஒரு பெயருக்காக மட்டுமே இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…