ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கிரண் ரத்தோடு . கடந்த 2002 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கிரண் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்துடன் வில்லன் , கமலுடன் அன்பே சிவம் , சரத்குமார் உடன் திவான், விஜயகாந்துடன் தென்னவன் ,
விஜயுடன் திருமலை என்று ந டிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் நடிகை கிரண் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கதாநாயகியாக,
கலக்கிக் கொண்டு வந்த கிரண் ஒரு கட்டத்தில் ஐட்டம் நடிகையாக மாறினார் . ஆனால் கடந்த ஏழு வருடமாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகை கிரண். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் செய்த தப்பை வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை கிரண் .
அதில் , நான் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு தவறான நபரை காதலித்தேன். அதனால் நான் பல பட வாய்ப்புகளை இழந்தேன் . பின்னர் அவருடைய உண்மையான முகம் தெரிந்தது ம் அவரை பிரிந்து விட்டேன். காதல் தோல்வியால் மிகவும் கஷ்டப்பட்டு தான் அதிலிருந்து மீண்டு வந்தேன் . ஆனால் இப்போது ,
பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. மேலும் நான் அன்று செய்த தவறு காதல் தான். அதனால் தான் என்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. அதனால் தான் இன்னும் திருமணமும் நடக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை கிரண்…