May 2, 2024

கேப்டன் கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா ..?? அட, இவர் வளர்ந்து வரும் நடிகராச்சே ..?? யாருன்னு நீங்களே பாருங்க …!!

தமிழ் சினிமா உலகைப் பொருத்தவரை கேப்டன் விஜயகாந்தின் திடீர் மரணம் தமிழ் சினிமாவிற்கே  ஒரு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது . மேலும் இவருக்கு மட்டும் உடல்நிலை சரியாக இருந்திருந்தால் இன்று அரசியல் , சினிமா இரண்டிலும் கொடிகட்டி பறந்து இருப்பார் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் .  ஆனால் அவருடைய கெட்ட நேரம் ,

அவருடைய உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார் . மேலும் திருமணமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு விஜய் பிரபாகர் , சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . இதில் இளைய மகனான சண்முக பாண்டியன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான,

சகாப்தம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து மதுரைவீரன் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார் நடிகர் சண்முக பாண்டியன் . ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .

இதை அடுத்து தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் சண்முக பாண்டியன். இதை முடித்த கையோடு சசிகுமார் இயக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .  இப்படி இருக்கும் நிலையில் ,

சண்முக பாண்டியன் சிறுவயதில் தன்னுடைய தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *