ராகவா லாரன்ஸ் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர் ,தயாரிப்பாளர் , நடன கலைஞர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸ் ராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்தார் . குறிப்பாக இவருடைய நடனத்திற்காகவே இவர் பெரிய அளவில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி ,
நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி பல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அப்படி இவருடைய டிரஸ்டுக்கு ஆரம்பத்தில் பல பிரபலங்கள் பணம் அனுப்பியுள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இனிமேல் என்னுடைய ஆசிரமத்துக்கு,
யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார் ராகவா லாரன்ஸ் . அதற்கு காரணம் என்னவென்றால் , அப்போது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தாராம் ராகவா லாரன்ஸ் . அதனால் அவருடைய வருமானம் உதவி செய்ய பத்த வில்லையாம். தற்போது ஆண்டவனின் அருளால் வருடத்திற்கு,
மூன்று படங்களில் நடிக்கிறாராம் ராகவா லாரன்ஸ் . இதனால் இனிமேல் தன்னுடைய ஆசிரம குழந்தைகளின் முழு செலவையும் என்னுடைய வருமானத்திலேயே பார்த்துக் கொள்ளப் போகிறேன் என்று கூறியிருக்கிறார் ராகவா லாரன்ஸ் . அப்படி உங்களுக்கு உதவி செய்ய ஆசை இருந்தால் உங்களுடைய வீட்டில் அருகிலேயே,
கஷ்டப்படுபவர்கள் பல பேர் இருப்பார்கள் அவர்களுக்கு உதவி செய்து புண்ணியத்தை சேருங்கள் என்று கூறியிருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ் . இதைப் பார்த்த ரசிகர்கள் உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதுனால தான் நாட்ல கொஞ்சமாச்சு மழை பெய்து என்று கூறி வருகின்றனர்…