கேப்டன் விஜயகாந்த் இறந்ததிலிருந்து வடிவேலுவை திட்டாத பிரபலங்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை வடிவேலுவை கிழி கிழின்னு கிழித்து வருகின்றனர் . அப்படி வடிவேலு உடன் நடித்த ஒரு நடிகரும் மோசமாக விமர்சித்திருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை நடிகர் பெஞ்சமின் தான். கடந்த 2000ம் ஆண்டு வெளியான வெற்றிக்கொடி கட்டு,
என்ற படத்தின் மூலம் அறிமுகமான பெஞ்சமின் தொடர்ந்து பகவதி, சாமி ,அன்பே சிவம் ,ஆட்டோகிராப் ,வசூல்ராஜா எம்பிபிஎஸ் ,திருப்பாச்சி, ஐயா, திருப்பதி, தமிழ் படம், மாஞ்சா வேலு ,வேங்கை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் வடிவேலுவுடன் இணைந்து,
இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெஞ்சமின் கூறியதாவது, சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே கேரவன் கொடுப்பார்கள் . ஆனால் எங்களைப் போன்ற ஜூனியர் ஆர்டிஸ்ட்க்கு எல்லாம்,
கேரவன் கொடுக்க மாட்டார்கள். மேலும் வடிவேலு கேரவனுக்குள் போனால் அவ்வளவு சீக்கிரம் வெளியே வர மாட்டார் . இன்னும் சொல்ல போனால் தன்னுடன் நடித்த நடிகர்கள் சாப்பிடவில்லை என்று தெரிந்தாலும் கூட அதை பற்றி சுத்தமாக கண்டுகொள்ள மாட்டார் .
ஆனால் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் எங்களைப் போன்ற சிறு கலைஞர்களை அழைத்து சாப்டீங்களா என்று எங்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பார் . ஆனால் வடிவேலு இதுவரை சாப்பிட்டியானு ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை, அவர் சிறந்த மனிதரே கிடையாது என்று கூறியிருந்தார்…