தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இவர் இந்த அளவிற்கு உயர்ந்தது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவர் இந்த அளவிற்கு முன்னேறியதற்கு காரணம் அவருடைய தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியும் தான். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில்,
பல வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங், ஈஷா கோபிகர் ,பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன் ,பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான்,
இசையமைத்துள்ளார் . இந்தத் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது . ஆனால் பல வருடங்களாக இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்து வந்தது. இதையடுத்து ஒரு வழியாக இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் ஒரு ரூபாய் கூட சம்பளமே வாங்கவில்லையாம் . என்னதான் இதை பலரும் பெருமையாக பேசினாலும், இதிலும் ஒரு யுத்தி இருப்பதாக கூறப்படுகிறது . அது என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் ,
பண நெருக்கடியில் இருந்தால் சம்பளமே வேண்டாம் என்று கூறி விடுவாராம் . ஆனால் அதன் பிறகு அந்தப் படம் ஹிட் ஆகிவிட்டால் அதில் பாதி தொகையை கேட்டு வாங்கிக் கொள்வாராம் . அதே யுத்தியை தான் தற்போது சிவகார்த்திகேயனும் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது…