தமிழ் சினிமா உலகில் ஒரு காமெடி நடிகர் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களுடன் பயணிக்கும் துணை காமெடி நடிகர்கள் தான். அப்படி துணை காமெடி நடிகர்களாக நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்கள் ஏராளம் உண்டு. அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் முத்துக்காளை . ஆரம்பத்தில் ஸ்டன்ட் கலைஞராக இருந்து வந்த முத்துக்களை கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான,
பொன் மனம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுயம்வரம் ,மின்சார கண்ணா ,யூத் ,அன்பே சிவம் ,வின்னர் ,எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,பேரரசு போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் .
இதனிடையே திருமணமான முத்து கடைக்கு ஒரு மகன் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் 58 வயதாகும் முத்துக்காளை தற்போது மூணு டிகிரி வாங்கி இருக்கிறார். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி ஏ வரலாறு பட்டத்தில்,
இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார் . இதன் பிறகு 2019 ஆம் ஆண்டு எம் ஏ தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் . இதை அடுத்து தற்போது பி.லிட் தமிழில் தேர்வு எழுதி அதிலும் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்கிறார் . குறிப்பாக இவருக்கு சிறுவயதில்,
இருந்தே பட்டதாரியாக வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தற்போது 58 வயதில் அந்த கனவு நிறைவேறி விட்டதாக கூறியிருந்தார் நடிகர் முத்துக்காளை . தற்போது நடிகர் முத்துக்காளைக்கு பிரபலங்களும் ,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…