May 6, 2024

பிறந்தநாளில் வந்த அதிர்ச்சி செய்தி..!! மனமுடைந்துபோன “எதிர்நீச்சல்” வேல ராமமூர்த்தி ..!! என்ன நடந்தது தெரியுமா ..??

தமிழ் சினிமா உலகில் பிரபல குணச்சித்திர நடிகராகவும் , வில்லன் நடிகராகவும் கலக்கிக்கொண்டு வருபவர் நடிகர் வேல ராமமூர்த்தி.  இவர் ஒரு எழுத்தாளரும் ஆவார் . அந்த வகையில் குற்ற பரம்பரை ,குருதியாட்டம், பட்டத்து யானை போன்ற பல கதைகளை எழுதி இருக்கிறார் நடிகர்  வேலராமமூர்த்தி . இப்படி  எழுத்தாளராக இருந்து வந்த வேலராமமூர்த்தி கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானை கூட்டம் என்ற,

படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கொம்பன் ,ரஜினி முருகன் ,சேதுபதி, தேவராட்டம், நம்ம வீட்டுப் பிள்ளை , க பெ ரணசிங்கம் ,அண்ணாத்த ,எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,

வில்லன் வேடங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகர் வேலராமமூர்த்தி . இதை அடுத்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து இறந்து விட்டதால் அவருக்கு பதிலாக நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார் .

இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய பிறந்தநாளை எதிர்நீச்சல் பட குழுவினர்களுடன் கோலாகலமாக கொண்டாடி இருந்தார் வேலராமமூர்த்தி . ஆனால் பிறந்தநாளில் அவருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது . அது என்னவென்றால் யாரோ இவருடைய பெயரை,

பயன்படுத்தி பொய்யான சமூக வலைத்தள கணக்குகளை தொடங்கி பல பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளதாம். அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும் நீங்கள் உஷாராக இருங்கள் என்று கூறியிருந்தார் வேலராமமூர்த்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *