April 23, 2024

எம்ஜிஆருக்கு பிறகு “அதை” செய்தது சிவகார்த்திகேயன் மட்டும் தான்..!! 60 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் நடந்த அதிசயம் ..!! என்ன தெரியுமா ..??

தற்போது தமிழ் சினிமாவில் சத்தமே இல்லாமல் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  இப்படி இருக்கும் நிலையில்  எம்ஜிஆருக்கு  பிறகு அந்த விஷயத்தை மீண்டும் செய்தது சிவகார்த்திகேயன் மட்டும் தானாம் .

அந்த வகையில் தமிழ் சினிமாவிலேயே முதன் முதலில் ஏலியன் படத்தில் நடித்திருந்தவர் எம்ஜிஆர் தான்.  அந்த வகையில் கடந்த 1963 ஆம் ஆண்டு வெளியான கலையரசி என்ற படத்தில் தான் ஏலியனை காட்டியிருந்தார்கள்.  இதன் பிறகு கிட்டத்தட்ட 60 வருடங்கள் கழித்து தான்,

தமிழ் சினிமாவில் ஏலியன் படம் உருவாகியுள்ளது. அந்த வகையில் “இன்று நேற்று நாளை” பட இயக்குனரான ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான் . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில்,

சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங் , ஈஷா கோபிக்கர் , யோகி பாபு ,கருணாகரன் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் . மேலும் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனால் இந்தத் திரைப்படமும் கண்டிப்பாக சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *