தற்போது தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . அப்படி சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதைஅடுத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ள,
புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் . இந்த படத்தில் தமிழ் நடிகை வேண்டாம் என்று பாலிவுட் நடிகைக்கு கொக்கி ப்போட்டு உள்ளாராம். அவர் வேறு யாருமில்லை நடிகை மிருணாள் தாகூர் தான். ஹிந்தி படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாகூர் கடந்த வருடம் வெளியான சீதா ராமம் ,
என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . இதனால் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…