April 30, 2024

முதலில் மனிதன், அப்பறம் தான் இயக்குனர் எல்லாம் ..!! திருநெல்வேலி மக்களுக்காக களத்தில் இறங்கிய மாரி செல்வராஜ் ..!!

மாரி செல்வராஜ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி இயக்கிய முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும்  தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் மாரி செல்வராஜ் .

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் ,உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ் .  இப்படி இருக்கும் நிலையில் சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களான ,

திருநெல்வேலி,  தூத்துக்குடி போன்ற பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது . இதனால் அன்றாட தேவைக்கே  போராடி வருகிறார்கள் மக்கள் . இந்த நேரத்தில் தன்னுடைய ஊர் மக்களுக்காக உதயநிதி ஸ்டாலின் உடன் களத்தில் இறங்கி இருந்தார் மாரி செல்வராஜ்.

இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது . இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீட்பு பணியில் தீவிரமாக இருந்து வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *