உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு பிசியான நடிகராகவும் , பிசியான தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் . அப்படி தற்போது இருக்கும் பல பிரபலங்களை வைத்து புதிய படங்களை தயாரித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன் . அந்த வகையில் ரங்கூன் என்ற படத்தை இயக்கிய பிரபலமான இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை ,
கமல்ஹாசன் தான் தயாரித்து வருகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் பட்ஜெட் பிரச்சினை,
காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த படத்தை கமல்ஹாசனும் , சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் திரைப்படம் பட்ஜெட்டை தாண்டி சென்று கொண்டிருப்பதை பார்த்து,
கடுப்பான சோனி நிறுவனம் இனிமேல் உங்களுடன் பணியாற்ற மாட்டேன் , இது தான் கடைசி ப்ராஜெக்ட் என்று கமலிடம் கூறிவிட்டார்களாம். மேலும் கமலும் , சோனி நிறுவனமும் வருங்காலத்தில் அடுத்தடுத்து 2000 கோடிக்கு பல முன்னணி பிரபலங்களின் படங்களை ,
தயாரிக்கலாம் என்ற திட்டத்தில் இருந்தார்களாம். ஆனால் அந்த கனவெல்லாம் தற்போது சிவகார்த்திகேயனின் படத்தினால் பகல் கனவாய் போய்விட்டதாம்…