தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் அண்மை காலமாக உதயநிதிக்கும் விஜய்க்கும் என்ன பிரச்சனை.? இவர்களும் பேசுவது இல்லையா.?
என்ற பல கேள்விகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின் . அது மட்டுமல்லாமல் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தையும் ,
உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்திருந்தார் . அப்படி நண்பர்களாக இருந்து வந்த இருவருக்கும் இடையே திடீரென பேச்சுவார்த்தை இல்லாமல் போனது . இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி கூறியதாவது , எனக்கும் விஜய்க்கும் எந்த ஒரு பிரச்சனையும்,
கிடையாது. அவர் என்னைப் பற்றி சொல்லியதாக சில விஷயங்கள் என்னுடைய காதுக்கு வந்தது . அதேபோல நான் அவரைப் பற்றி கூறியதாக ஒரு சில விஷயங்கள் அவரின் காதுக்கு சென்றது . இதுதான் எங்கள் இருவருக்கும் இடையே சின்ன மனஸ்தாபத்தை ஏற்படுத்தியது.
இதனால் பல வருடங்களாக எங்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை என்று பகிர்ந்து இருந்தார் உதயநிதி ஸ்டாலின் . அப்படி இருந்தாலும் கூட விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள லியோ படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் விநியோகப்படுத்தும் என்று கூறப்படுகிறது…