April 28, 2024

தீர்ப்பை மாத்தி மாத்தி சொல்லும் கமல் ..!! இனி பிக்பாஸின் நாட்டாமை இவர் தானா ..?? இவராவது சரியாக தீர்ப்பு சொல்வாரா..??

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது . இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் ஏழாவது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது . மேலும் இதற்கு முந்திய சீசன்களில் எல்லாம்,

கமலின் தீர்ப்பு சரியாக இருக்கும்.  அந்த அளவிற்கு தராசு போல இருவரது பக்கமும் இருக்கும் நியாயத்தை தெரிந்து கொண்டு தீர்ப்பு சொல்வார் . ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்களிடமே பாரபட்சம் பார்க்கிறார் கமல்ஹாசன் . இன்னும் சொல்லப்போனால் மாயா எது செய்தாலும்,

அதை கண்டிப்பது போல கண்டித்து அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்.  அதோடு பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய போது ரசிகர்கள் கமலுக்கு எதிராக கொந்தளித்தனர் . இதனால் கமலுக்கு என்னதான் ஆச்சு .? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்,

என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இப்படி தொடர்ந்து எதிர்ப்பு வருவதால் கமல் இனி பிக் பாஸ் நமக்கு செட் ஆகாது என்று முடிவெடுத்து விட்டாராம் . அது மட்டுமல்லாமல் தற்போது அவருக்கு நிறைய திரைப்படங்கள் வரிசையில் இருக்கிறது .

இதனால் அடுத்த சீசனை தொகுத்து வழங்கப்போவது சரத்குமார் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் நாட்டாமை கரெக்ட்டா தீர்ப்பு சொல்வாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *