May 6, 2024

உண்மையான நீலாம்பரி யார் தெரியுமா..?? இவருக்கும் ரஜினிக்கும் இப்படியொரு பகையா ..?? பல வருடங்கள் கழித்து உண்மையை சொல்லிய கே எஸ் ரவிக்குமார் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிவாஜி கணேசன் ,ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, சீத்தாரா, ராதாரவி ,நாசர் ,மணிவண்ணன் ,செந்தில் ,அப்பாஸ் ,பிரீத்தா போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்திருந்தனர்.

இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இன்னும் சொல்லப்போனால் எத்தனை முறை பார்த்தாலும் இந்த திரைப்படம் சலிக்கவே சலிக்காது.  அதுவும் இந்த படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த,

நடிகை ரம்யா கிருஷ்ணன் பெரிய அளவில் பேசப்பட்டார் . ஆனால் உண்மையான நீலாம்பரி இந்த பிரபலம் தானாம் . இவரை மனதில் வைத்து தான் இந்த கதாபாத்திரத்தையே உருவாக்க சொன்னாராம் ரஜினிகாந்த்.  அவர் வேறு யாருமில்லை மறைந்த முன்னாள் முதலமைச்சரான ,

ஜெயலலிதா தான் . ஆரம்ப காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும்,  ரஜினிக்கும் இடையே இருந்த மனக்கசப்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதனால் தன்னுடைய படங்கள் மூலம் தொடர்ந்து ஜெயலலிதாவை மறைமுகமாக எதிர்த்து வந்தார் ரஜினி . அப்படித்தான் இந்த படத்திலும்,

ஜெயலலிதாவை மனதில் வைத்துக்கொண்டு நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளனர் .  இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரே  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *