தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய் . இவர் அண்மைக்காலமாக அரசியலுக்கு வருவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இதனால் இப்போதே தன்னுடைய ரசிகர்களை அதற்காக தயார் படுத்தி வருகிறார் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல்,
சென்னையையே சூறையாடியது. இதனால் அத்தியாவசிய தேவைக்காக சென்னை மக்கள் தவித்துக் கொண்டிருந்தனர் . இதை கேள்விப்பட்ட ஒரு சில நடிகர்கள் முன்வந்து உதவி செய்தனர் . ஆனால் தற்போது நடிகர் விஜய் போட்ட பதிவு தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது .
அந்த வகையில் மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதால் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகர் விஜய் .
இதற்கும் அந்த புயல் வந்து இரண்டு நாள் கழித்து இப்படி ஒரு பதிவை போட்டு இருந்தார் விஜய். மேலும் தலைவன் என்பவன் தன்னுடைய தொண்டர்களை நிர்வாகித்து வந்தாலும் , ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக இருப்பது அந்த தலைவனாக தான் இருக்கும் .
அதோடு 100 கோடி சம்பளம் வாங்கினாலும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ரசிகர்களை செய்ய சொல்லியதும் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதனால் பலரும் விஜய்க்கு தலைவனாகும் தகுதியே கிடையாது என்றெல்லாம் கூறி வருகின்றனர்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம்…
— Vijay (@actorvijay) December 6, 2023