தற்போது தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . காரணம் இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு படத்திற்கு 35 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்க வில்லையாம் .
அந்த வகையில் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனரான ரவிக்குமார் இயக்கத்தில் உருவான அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங் ,ஈஷா கோபிகர் ,பானுப்பிரியா, யோகி பாபு ,கருணாகரன் ,பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . ஆனால் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தான் இந்த படமே வெளியாக இருக்கிறது . மேலும் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . இப்படி இருக்கும் நிலையில்,
இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்கவில்லையாம். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது , அயலான் திரைப்படம் பண பிரச்சனையில் சிக்கி பாதியிலேயே நின்று போனது . அப்போது எனக்கு சம்பளமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதற்கு காரணம்,
இயக்குனர் ரவிக்குமார் தான். நான் சம்பளத்தை இழந்ததை கூட நான் பெரிசாக நினைக்கவில்லை. காரணம் இயக்குனர் ரவிக்குமார் என்ற மனிதரை சம்பாதித்து இருக்கிறேன் . அவர்தான் எனக்கு மிகப்பெரிய சொத்து என்று கூறியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்…