ஐஸ்வர்யா ராய் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் பின்னர் உலக அழகி பட்டம் வென்ற பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. அப்படி கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை தொடங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராய் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீன்ஸ்,
கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் ,ராவணன் ,எந்திரன் ,பொன்னியின் செல்வன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய் . என்னதான் இவர் தமிழ் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது,
ஹிந்தி படங்கள் தான். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல ஹிந்தி நடிகரான அபிஷேக் பிரச்சனை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராய் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில்,
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பதினாறு ஆண்டுகள் ஆன நிலையில் ஐஸ்வர்யா ராயை அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் திருமணத்தின் போது ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனுக்கு போட்டிருந்த மோதிரத்தை,
அவர் கழட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் கையில் அந்த மோதிரம் இல்லை . இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக காட்டு தீ போல தகவல் பரவி வந்தது . அதோடு ஐஸ்வர்யா ராய்,
பிறந்தநாளுக்கும் அபிஷேக் வேண்டா வெறுப்பாக பதிவு போட்டிருந்தார் . ஆனால் இது உண்மை கிடையாது ,அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகிறார்களாம் . இருந்தாலும் இது குறித்து ஐஸ்வர்யா ராய் திறந்தால் தான் உண்மையான தகவல் வெளிவரும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…