பிரியாமணி ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பருத்திவீரன் படத்தின் மூலம்தான். இந்த படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ,
தேசிய விருதை வென்று இருந்தார் நடிகை பிரியாமணி. பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா ,நினைத்தாலே இனிக்கும் ,ராவணன், சாருலதா போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பிரியாமணி . மேலும் இவர் தமிழ் மொழி,
மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை பிரியா மணி , இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய,
பேட்டி ஒன்றில் நடிகை பிரியாமணி கூறியதாவது, பெண்கள் 30 வயதை தாண்டி விட்டாலே ஆன்ட்டி என்று அவர்களை அழைக்கிறார்கள் . ஆனால் ஆண்கள் 40 , 50 வயது ஆனாலும் அவர்களை யாருமே அங்கிள் என்று அழைப்பது கிடையாது . என்னையும் சில பேர் அப்படி அழைத்தார்கள்.
எனக்கு 39 வயது தான் ஆகிறது. ஆனால் நான் இப்போதும் பிட்டாக தான் இருக்கிறேன். ஆரம்பத்தில் இது போன்ற விமர்சனங்கள் எனக்கு வருத்தம் அளித்தாலும், இப்போது அதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை பிரியாமணி…