April 29, 2024

என் மக ன் மீ து சினி மா நிழ ல் கூட படக் கூ டாது ..!! மணி ரத் னம் கேட் டும் ம றுத்த நடி கர் மா தவ ன் ..!! கா ரண த்தை கேட் டு வியந் து போ ன ரசிக ர் கள் ..!!

மாதவன் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  கடந்த 2000 ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் மாதவன்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மின்னலே ,டும் டும் டும் ,கன்னத்தில் முத்தமிட்டால்,

ரன் ,அன்பே சிவம், பிரியமான தோழி ,ஜே ஜே போன்ற பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் .அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நடிகராக கலக்கிக் கொண்டு வந்த மாதவன் கடந்த ஆண்டு வெளியான ராக்கெட்ரி என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.  மேலும் இவருக்கு திருமணமாகி வேதாந்த் என்ற மகனும் இருக்கிறார் . இந்நிலையில் மாதவனை அறிமுகப்படுத்திய இயக்குனர் மணிரத்னம் அவருடைய மகனையும் ,

சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைப்பது குறித்து மாதவனிடம் கேட்டிருக்கிறார்.  ஆனால் நடிகர் மாதவன் தன்னுடைய மகன் மீது சினிமாவின் நிழல் கூட படக்கூடாது என்று கூறிவிட்டாராம்.  ஏனென்றால் அவருடைய  மகனுக்கு நீச்சல் போட்டியில் தான் அதிகம் ஆர்வம் உள்ளதாம் . அதனால் தன்னுடைய மகன்,

கனவை நோக்கி ஓட வேண்டும் என்று இப்படி கூறி இருக்கிறார் . அப்படி அப்பாவின் நம்பிக்கையை காப்பாற்றியும் இருக்கிறார் அவருடைய மகன்.  அந்த வகையில் மாதவனின் மகன் இதுவரை இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *