தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் மனதை பெரிய அளவில் கவர்ந்த சில நடிகைகள். அந்த நடிகைகள் படத்தில் பார்வையற்றவர்களாக நடித்து கண்கலங்க செய்த கதாபாத்திரத்தில் “நான் கடவுள்” இதில் ஆர்யா மற்றும் பூஜா நடித்தனர். இப்படத்தில் பூஜாவின் கண்களில் வைட் கலர் லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் அது நிஜமாகவே பார்வை தெரியாது. இதனை அடுத்து அது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதை எப்பொழுதுமே கண்களில் மாட்டிக் கொண்டு தான் இருந்திருக்கிறார்.
அது அங்கு இருந்த சில பேருக்கு உண்மையாகவே இவருக்கு கண் தெரியாது என்று நினைத்து தானம் கூட செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எதார்த்தத்துடன் நடித்து இருப்பார். சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா ஆகியோர் “பேரழகன்” திரைப்படத்தில் நடித்திருந்தனர். நடிப்பின் நாயகி என்ற பெயர் வாங்கிய ஜோதிகா இந்த கதாபாத்திரத் திலும் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
ரேவதி முதன் முதலில் இயக்குனராக அறிமுகமாகிய நாசர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு “அவதாரம்” திரைப்படம் வெளியானது. இப்படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை யை நம்பகத் தன்மையுடன் எதார்த்தத்துடன் சித்தரிக்கப்பட்டு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.
இதில் வரும் “தென்றல் வந்து தீண்டும் போது” என்ற பாடல் இந்தக் காலத்து வரைக்கும் ரசிகர்களின் மனதை வருடும் பாடலாக அமைந்து வருகிறது. இதில் கண் தெரியாதவர் களின் நிலைமையை எதார்த்தத்துடன் ரேவதி நடித்துக் காட்டி இருப்பார். மாளவிகா நாயர் ராஜ முருகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு “குக்கூ” திரைப்படம்
காதல் உணர்வோடு வெளிவந்தது. இதில் இவர்கள் இருவருமே பார்வை யற்றவர்களாக இருந்தாலும் இவர்களுக்குள் ஒரு காதல் உணர்வு ஏற்பட்டு உண்மை காதல் என்றுமே தோற்காது என்ற எடுத்துக்காட்டுக்கு பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வர வைக்குற அளவுக்கு தத்ரூபமாக நடித்திருப்பார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது.