பப்லு பிரித்விராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் சீரியல் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த பப்லு பிரித்விராஜ் தமிழில் வெளியான பாண்டி நாட்டு தங்கம், அழகன், புதிய மன்னர்கள், அவள் வருவாளா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டு வந்த பப்லு பிரித்விராஜ் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான ,
மர்ம தேசம் ,ரமணி vs ரமணி ,கோகுலத்தில் சீதை, வாணி ராணி ,கண்ணான கண்ணே ,அன்பே வா போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இதனிடையே கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இப்படி இருந்த நிலையில் கடந்த வருடம் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த பிரித்விராஜ் 23 வயது பெண்ணான ஷீத்தல் என்பவரை மனைவி என்று கூறினார் . இதன்பிறகு தன்னுடைய மனைவியுடன் எடுத்த வீடியோவையும் புகைப்படங்களையும் தொடர்ந்து,
பதிவிட்டு வந்தார்பப்லு பிரித்விராஜ் .இந்நிலையில் பப்லு பிரித்விராஜ் அவருடைய மனைவியை பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பப்லு பிரித்விராஜும் அவருடைய மனைவியான ஷீத்தலும் எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்து விட்டாராம் ஷீத்தல் .
இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் போல என்று பதிவிட்டு இருந்தார் . அந்த பதிவிற்கு விளக்கம் கொடுக்காமல் லைக் போட்டு இருந்தார் ஷீத்தல் . ஆனால் இவர்கள் பிரிந்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை …