ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான முக்கிய சீரியல்களில் ஒன்று தான் செம்பருத்தி சீரியல் . இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் ஷபானா . இந்த சீரியல் இவரை தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் இவர் செம்பருத்தி சீரியலை தொடர்ந்து,
விஜயதசமி, மிஸ்டர் மனைவி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் ஆர்யனை,
காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஷபானா. மேலும் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளனர். அந்த வகையில் ஆர்யன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்,
ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சீக்கிரம் குட்டி ஷபுவ லான்ச் பண்றோம் என்று பகிர்ந்து இருந்தார். தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…