தற்போது சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த அளவிற்கு மனசாட்சியே இல்லாமல் 100 கோடி , 200 கோடி என்று சம்பளம் கேட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் தற்போது ஒரு படத்திற்கு 120 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம் . இதனால் அடுத்த படத்திற்கு ரஜினி 200 கோடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரையும் ஓரங்கட்டி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க உள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் அல்லு அர்ஜுன் தான் . தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்த அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூலம் ,
பெரிய அளவில் பிரபலமானார் . இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக சம்பளமே வேண்டாம் என்றும் படத்தில் வரும் லாபத்தில் இருந்து 33 சதவீதத்தை சம்பளமாக கொடுக்க சொல்லி,
கேட்டு இருக்கிறாராம். மேலும் புஷ்பா 2 கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்தால் அல்லு அர்ஜுனுக்கு மட்டுமே 330 கோடி சம்பளம் போகும் என்று கூறப்படுகிறது . அதையும் மீறி இந்த படத்தின் வசூல் குறைந்தாலும்,
குறைந்தபட்சம் அல்லு அர்ஜுனுக்கு 200 கோடி சம்பளமாவது கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது . அப்படி பார்த்தால் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அந்தஸ்தை அல்லு அர்ஜுன் பெற்று விடுவார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது…