தமிழ் திரையுலகை கலக்கிக்கொண்டு வரும் முக்கிய நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்கள் தான் சுந்தர் சி மற்றும் குஷ்பூ. கடந்த 1995ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறைமாமன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை குஷ்பூ . அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. பின்னர் கடந்த 2000 வருடம் குஷ்பூவும், சுந்தர்சியும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் குஷ்பூவும் , சுந்தர் சி யும் இணைந்து அவ்னி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து இருக்கின்றனர் குஷ்பூவும் ,சுந்தர்சியும்.
அதோடு இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு சில சீரியல்களையும் தயாரித்து இருக்கின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் இதுவரை சுந்தர் சியும் , குஷ்பூவும் சேர்த்து வைத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பூவின்,
மொத்த சொத்து மதிப்பு சுமார் 90 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து தற்போது பல படங்களை இயக்கிக் கொண்டும் நடித்துக் கொண்டும் வரும் சுந்தர் சி யின் சொத்து மதிப்பு சுமார் 78 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இவர்களுடைய இருவரது சொத்தையும் சேர்த்தால் அவர்களுடைய மகள்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பேரன் பேத்திகளும் அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது…