தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கிக் கொண்டு வந்தவர் மறைந்த நடிகர் மாரிமுத்து. ஆரம்பத்தில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புலிவால் என்ற படத்தை இயக்கி இருந்தார் .ஆனால் இவர் இயக்கிய,
இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு பெறவில்லை . இதனால் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தார். அப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த மாரிமுத்துவுக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் பெரிய,
அளவில் கை கொடுத்தது . இப்படி இருந்த நிலையில் கடந்த வாரம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் நடிகர் மாரிமுத்து . இப்படி இருக்கும் நிலையில் 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்த மாரிமுத்து சேர்த்து வைத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது .
அந்த வகையில் சினிமாவில் இத்தனை வருடங்களாக இருந்தாலும் இப்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வந்தாராம் மாரிமுத்து . மேலும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு நாளைக்கு 40,000 முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வந்தாராம். இதை அடுத்து சமீபத்தில்தான் ஒன்றை கோடி,
மதிப்பில் ஒரு சொந்த வீடு ஒன்றை கட்டியிருந்தார். ஆனால் குடி போவதற்குள் இறந்து விட்டார் . மேலும் மாரிமுத்து சொந்தமாக ஒரு கார் ஒன்றையும் வைத்திருக்கிறார். அப்படி கூட்டி கழித்து பார்த்தால் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 2 கோடி தான் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது…