April 22, 2024

மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் மாரிமுத்துவுக்கு ஆளுயர சிலை ..!! திறந்து வைத்த தொண்டர்கள் ..!! தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகர்கள் இறந்த பிறகு தான் அவர்கள் எவ்வளவு தங்கமான மனிதராக வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தெரியும்.  அந்த வகையில் பல பேரை கூறலாம்.  அந்த வரிசையில் ஒருவர் தான் மறைந்த நடிகர் மாரிமுத்து . உதவி இயக்குனராக  தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய மாரிமுத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து புலிவால் என்ற படத்தையும் இயக்கி இருந்தார் .  ஆனால் இவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே  பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் முழு நேர நடிகராகவே களம் இறங்கினார் மாரிமுத்து . அப்படி தமிழ் படங்களில் குணச்சித்திர,

கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார் நடிகர்  மாரிமுத்து . மேலும் பல தமிழ்  திரைப்படங்களில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு எதிர்நீச்சல் சீரியலில் கிடைத்தது தான் இவருக்கு பெருமையே . அப்படி எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில்,

நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும்  கவர்ந்திருந்தார்  நடிகர் மாரிமுத்து . இன்னும் சொல்லப்போனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது  . இப்படி இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பால் இறந்து விட்டார் நடிகர் மாரிமுத்து.

இப்படி இருக்கும் நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கும்,  பிரதமர் மோடியின் தாயாருக்கும் பாஜகவினர் விழுப்புரத்தில் சிலை வைத்துள்ளனர்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *