April 22, 2024

5 மாசம் ஆகிடுச்சு ..!! ரொம்ப ஆர்வமா இருக்கேன் ..!! ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லிய சமந்தா ..!!

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.  தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் திரைப்பயணத்தை  தொடங்கிய சமந்தா கடந்த 2010 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம் ,அஞ்சான்,

கத்தி ,பத்து என்றதுக்குள்ள ,தங்கமகன் ,பெங்களூர் நாட்கள், தெறி, மெர்சல், இரும்புத்திரை ,சீமராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சமந்தா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ,

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே நாக சைதன்யாவை  திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்து விட்டார் நடிகை சமந்தா . மேலும் விவாகரத்துக்கு பிறகு மயோசிட்டிஸ் என்ற அறிவகை நோயால் பாதிக்கப்பட்ட,

சமந்தாவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் குஷி . இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகியும் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகை சமந்தா . இப்படி இருக்கும் நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு,

குட் நியூஸ் சொல்லியுள்ளார் நடிகை சமந்தா . அது என்னவென்றால் மீண்டும் நடிப்பதற்கு திரும்புகிறேன் , மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், கண்டிப்பாக இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி இருக்கிறார் நடிகை சமந்தா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *