April 29, 2024

வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவதா..?? குஷ்பூ வீட்டில் குவிந்த போலீசார் ..!! மன்னிப்பு கேட்பாரா ..??

ஒரு காலகட்டத்தில் தமிழ் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு வந்தவர் தான் நடிகை குஷ்பூ . தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான குஷ்பூ குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் . இப்படி சினிமாவில் கலக்கிக்கொண்டு வந்த குஷ்பூ தற்போது அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார் . அப்படி சமீபத்தில் மன்சூர் அலிகான் -திரிஷா ,

விவகாரத்தில் கூட திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் நடிகை குஷ்பூ.  இப்படி இருக்கும் நிலையில் திரிஷாவுக்கு ஆதரவு கொடுத்த குஷ்பூ மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்ப பட்டது.  அதற்கு பதில் அளித்த குஷ்பூ ,

திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியை தான் பயன்படுத்துவார்கள்.  என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது என்று கூறியிருந்தார் குஷ்பூ . தற்போது இவர் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் கொந்தளித்த காங்கிரஸ் கட்சி குஷ்பூ பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் , அப்படி கேட்காவிட்டால் அவருடைய வீட்டை முற்றுகை இடுவோம் என்றும் , இனிமேல் குஷ்பூவால் தமிழகம் எங்கும் நடமாட முடியாது என்று கூறியிருந்தார் .

இந்த சம்பவங்களால் தற்போது குஷ்பூவின் பாதுகாப்புக்காக அவருடைய வீட்டில் போலீசார் குவிந்துள்ளனர்.  இதை பார்த்த ரசிகர்கள் வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவதா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *