May 1, 2024

திரிஷா விவகாரத்தில் வாய் திறக்காத விஜய் ..!! இவர் தான் அடுத்த எம் ஜி ஆரா ..?? சராமாரியாக கேள்வியெழுப்பிய பிரபலம் ..!!

தற்போது சமூக வலைத்தளங்களில் திரிஷாவின் விவகாரம் தான் காட்டுத்தீ போல பரவி வருகிறது.  அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திரிஷாவை தரக்குறைவாக பேசியிருந்தார் நடிகர் மன்சூர் அலிகான் . இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதனால் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .

ஆனால் திரிஷாவுடன் நடித்த விஜய் தற்போது வரை வாய் திறக்காமல் இருந்து வருகிறார்.  அந்த வகையில் திரிஷாவும், விஜய்யும் இணைந்து கில்லி ,திருப்பாச்சி ,ஆதி ,குருவி, லியோ போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே நல்ல நட்பு,

இருந்து வருகிறது.  அப்படி இருக்கும்போது மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி தரக்குறைவாக பேசியதற்கு இப்போது வரை வாய் திறக்காமல் இருந்து வருகிறார் நடிகர் விஜய். இன்னும் சொல்லப் போனால் நடிகர் விஜய் அடுத்த எம்ஜிஆர் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால் உண்மையில் எம்ஜிஆரை பொறுத்தவரை சக நடிகைகளை யாராவது சீண்டினால் அவர் அடிக்கவும் அஞ்ச மாட்டார்.  அப்படி இருக்கும்போது விஜய் திரிஷா விவகாரத்தில் வாய் திறக்காமல் இருந்ததால் இவர்தான் அடுத்த எம்ஜிஆரா  என்று கேள்வி எழுப்பி உள்ளார்,

பத்திரிக்கையாளர் அந்தணன்.  அதோடு அவர் கேள்வி கேட்க வில்லை என்றாலும் திரிஷாவுக்கு ஆதரவாக ஒரு பதிவாவது போட்டு இருக்கலாம் அதைக் கூட விஜய் செய்யவில்லை என்று சராமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார் அந்தணன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *