தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய இயக்குனராக அறிமுகமான லோகேஷ் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர் ,விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் .
இதனாலேயே இவருடைய படத்தில் பணி புரிவதற்கு பல பிரபலங்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்நிலையில் தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷுக்காக காத்திருக்கிறாராம் பிரபல மாஸ் நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் பிரபாஸ் தான். இந்திய சினிமாவில் ,
ஒரு முக்கியமான நடிகராக பார்க்கப்படும் பிரபாஸ் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் தான் பெரிய அளவில் பேசப்பட்டார் . இந்தப் படத்திற்கு பிறகு தான் இவருடைய மார்க்கெட் உச்சத்திற்கே சென்றது . ஆனால் அதன் பிறகு இவர் நடித்த,
சாஹோ , ராதே ஷியாம் , ஆதிபுருஷ் போன்ற திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது . இதனால் மனமடைந்து போன பிரபாஸ் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் தஞ்சமடைந்துள்ளாராம் . அந்த வகையில் சூர்யாவுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதிய இரும்புக்கை மாயாவி படத்தில்,
பிரபாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . குறிப்பாக இவருக்காக சூர்யா விட்டுக்கொடுத்தாகவும் கூறப்படுகிறது . இதை பார்த்த ரசிகர்கள் பாகுபலி நடிகருக்கே இப்படி ஒரு நிலைமையா என்று கூறி வருகின்றனர்…